தமிழகம்

மதுரை புத்தக தாத்தா காலமானார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புத்தக தாத்தா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட முருகேசன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நல குறைவால் காலமானார்.

புத்தகத் தாத்தா!

பள்ளி படிப்பைக்கூட தாண்டாத, பழைய பேப்பர் கடைக்காரர்தான் முருகேசன். படிப்பு வாசனையே அறியாத இந்த முருகேசனின் உதவியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கும் முருகேசனால், எந்தப் புத்தகத்தில் என்ன செய்தி இருக்கிறது என தெளிவாகச் சொல்ல கூடியவர்.

ALSO READ  நடிகர் சின்னி ஜெயந்த் மகன் பதவியேற்பு!

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு, ஆய்வுக்குத் தேவையான கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களைத் தேடுவது என்பது ஞானப் பழத்துக் காக உலகத்தைச் சுற்றி வருவதைப் போன்று கஷ்ட மானது. ஆனால், புத்தகத் தாத்தாவைச் சுற்றி வந்தால் நொடியில் கிடைத்துவிடுகிறது அந்த ஞானப் பழம்.

யார் கேட்டாலும் புத்தகம் இருந்ததால் கொடுப்பார்; இல்லை தேடியாவது கொடுப்பார். தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார். இந்நிலையில், வயதுமுதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலியல் கொடுமை – மாணவி தற்கொலை… கோவையை உலுக்கும் மற்றொரு சம்பவம்

naveen santhakumar

திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அச்சம்.. கலெக்டர் தந்த விளக்கம்…

naveen santhakumar

14 முதல் 28 நாட்கள் மிக முக்கியமானது….சுகாதாரத்துறை செயலாளர்:

naveen santhakumar