மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலை 98.6 மேல் இருந்தால் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
வாக்கு எண்ணும் அறைக்கு செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக எடுக்க வேண்டும். இரண்டு தடவை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதி என்று தெரிவித்தார்.
மே1 மற்றும் மே 2 தேதி அன்று பொது முடக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுக்குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். வருகின்ற மே இரண்டாம் தேதி, தேர்தல் வழிமுறைகள், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் எனத் தெரிவித்தார்.