சென்னை:-
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியதால், சென்னைக்கு ‛ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியது. கடந்த 6 மணி நேரத்தில் 16. கி.மீ., வேகதத்தில் நகர்ந்து வருகிறது.
இதே வேகத்தில், முழுவதுமாக 2 மணி நேரத்தில் கரையை கடக்கும். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் சென்னையில், அதி கனமழைக்கான எச்சரிக்கை (ரெட் அலர்ட்) திரும்ப பெறப்படுகிறது. எனினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறினார்.