தமிழகம்

உணவுத்துறை அமைச்சர் காமராஜிற்கு கொரோனா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக கூறப்பட்டாலும்,பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உருமாறிய கொரோனா பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், நிலோஃபர்கபில் உள்ளிட்டோர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.இதேபோன்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு MP, MLAக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர்.

ALSO READ  புதுச்சேரியில் ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை !

இந்நிலையில், தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால், பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

News Editor

காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு!

Shanthi

வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

News Editor