தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து 33 அமைச்சர்களும் தங்கள் பதவியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட சில நிமிடங்களிலே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் என இணைத்து கொண்டார்.
இதனையடுத்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வர் என மாற்றிக்கொண்டார்.