தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே இந்தியாவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்ற முயற்சி ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.
இதேபோல தமிழகத்திலும் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப் படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக போரூர் அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (Trade Centre) சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா தனிமை வார்டுகள் தயாராகிவருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.