தமிழகம்

நீட் தேர்வு – கோவை மாணவர் விஷம் குடித்து தற்கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவையில் நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திவாசன். இவர் கடந்த 2019, 2020ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நீட் தேர்வை எழுதிய அவர் முடிவுக்காக காத்திருந்த கீர்த்திவாசன் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனவருத்ததில் இருந்ததாக தெரிகிறது.

ALSO READ  பட்டியல் இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவி தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடை

இந்நிலையில், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளாக வேறு கல்லூரிக்கு செல்லாமல் நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக மாணவர் கீர்த்திவாசன் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முழு ஊரடங்கில் இதற்கு மட்டும் அனுமதி… தமிழ்நாடு அரசு அதிரடி!

naveen santhakumar

தனது நற்செயலால் மக்களின் கவனத்தை ஈர்த்த பிச்சைக்காரர்:

naveen santhakumar

நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் விடுமுறை… வெளியானது அதிரடி உத்தரவு!

naveen santhakumar