தமிழகம்

தஞ்சையில் உதவுவது போல் நடித்து பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தஞ்சையில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை கடத்தல்

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது24 ) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்கள் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடியில் உள்ள வார்டில் ஒரு பெண் அவரிடம் ‘என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்’ எனக் கூறி உதவி செய்வது போல் நடித்துள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தை கடத்தல் |  New born girl baby kidnapped from government hospital in Tanjore |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...

கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து அவருடனே இருந்தார். இதனால் அந்த பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார்.

ALSO READ  நாளைமுதல் பள்ளிகள் திறப்பு; 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தாயார் !

இன்று காலை அந்த பெண் ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறினார். இதனை நம்பிய ராஜலட்சுமியும் குளிக்க சென்றார். அப்போது அந்தப்பெண் தனக்கு மயக்கம் வருவதாக கூறி குணசேகரனை அழைத்து வெந்நீர் வாங்கி வரச் சொல்லியுள்ளார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் | Infant trafficked  in tanjur government hospital - hindutamil.in

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அப்பெண் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ஒரு கட்டைபையில் வைத்து கடத்தி கொண்டு வேகமாக சென்றுள்ளார். இதற்கிடையே குளித்து விட்டு வார்டுக்கு வந்த ராஜலட்சுமி குழந்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறியடித்து கொண்டு பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக தனது கணவர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் குழந்தையின் நிலை தெரியவில்லை. அப்போது தான் ராஜலட்சுமிக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

ALSO READ  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை:

இது குறித்து அவர் கணவரிடம் கூறினார். மேலும் இது தொடர்பாக மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் ஆய்வு செய்தபோது ராஜலட்சுமிக்கு உதவியாக இருந்த பெண் கட்டைபையில் குழந்தையை தூக்கி கொண்டு கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நகர் முழுவதும் தகவல் கொடுத்து அந்த பெண் பற்றிய அடையாளங்களை கூறி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மின் தடையை போக்க கடலில் காற்றாலை மின் உற்பத்தி

News Editor

மழைநீர் கால்வாய்களை தூர்வார 10 கோடி செலவில் 100 ரோபோ: சென்னை மாநகராட்சி திட்டம்

Admin

மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் !

News Editor