சென்னை:-
தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு இன்னும் பேருந்து போக்குவரத்து தொடங்காததால், அதுபற்றி இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், திரையரங்குகள், மதுக்கூடங்களை திறப்பது குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிய உள்ளார்.
முக்கியமாக பள்ளிகளை திறக்கும் சூழல் குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை மாநகராட்சி கொரோனா கட்டுப்பாடுகளை தீவிமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.