இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பின் பேசியதாவது, “பொதுமக்கள் தொடர்ந்து 3 வாரங்கள் முகக்கவசம் அணிவதை பின்பற்றினால் தான் கொரோனா பரவல் சங்கிலியை முறியடிக்க முடியும் என்றார். தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
#Corona #coronanews #CoronaUpdate #TamilThisai #Chennai #ChennaiCommissinor #NewsUpdate #PoliticalUpdate