தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் இனி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 5ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரேகட்ட தளர்வுகளுடன் ஜூலை 12ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 5ம் தேதி முதல் இ-பாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
அதேபோல, கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல 12ம் தேதி (திங்கள்) முதல் இபாஸ் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.