கர்ப்பிணியாக இருக்கும் அரசு ஊழியர்கள் பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படாது என்று தமிழக அரசு புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு பணியில் உள்ள மகளிருக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980 ஆண்டு முதல் 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு இருந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இதை 6 மாதமாக உயர்த்தினார். இதன்பிறகு பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டது.
இந்த சூழலில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் 9 மாதமாக உள்ள பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.