தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட, 11 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர்,டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேநீர் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.