தமிழகம்

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள், நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

ALSO READ  குமரியில் சூறைக்காற்று; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

நவம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டுடன் குமரி இணைந்த தினம். இதனை முன்னிட்டு நவம்பர் 1 திங்கட்கிழமை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 13ம் தேதி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  வயது வித்தியாசம் பார்க்காமல் பல பெண்களின் கற்பை சூறையாடிய மேடைப் பாடகர் !

ஆனால் குமரி மாவட்ட தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் ஆகியவை அரசின் அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயவுசெய்து மாஸ்க் போடுங்க; கையெடுத்து கும்பிட்ட காவல் ஆய்வாளர் !

News Editor

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் !

News Editor

திருவண்ணாமலை தீபத்திருவிழா: கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி…!

naveen santhakumar