தமிழகம்

இளைஞன் ஒருவனால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகேயுள்ள செட்டிநாயக்கன்பட்டியில் மூதாட்டி ஒருவர் டீ கடை நடத்தி வந்தார்.பெயர் மீனாட்சி (60). இவர், தினந்தோறும் இரவில் கடையை மூடிவிட்டு அதன் உள்ளேயே தூங்குவார். இந்தநிலையில், நேற்றிரவு கடையை மூடிவிட்டு, வழக்கம்போல் கடைக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது டேவிட் நகரைச் சேர்ந்த பிரதீஸ் (19) என்ற இளைஞன், டீ கடையை திறக்கச் சொல்லி, மூதாட்டி மீனாட்சியிடம் தகராறு செய்துள்ளான். இதனையடுத்து கடையை திறந்து பார்த்தபோது, போதையில் இருந்த இளைஞர் பிரதீஸ், மூதாட்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ALSO READ  சாமான்ய மக்களின் தோழனாய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..குவியும் பாராட்டுக்கள்..

இதனையறிந்த பிரதீஸ், அங்கிருந்து தப்பியோட முயல்கையில், பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து, கை, கால்களை கட்டியுள்ளனர்.பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி, பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குற்றவாளி பிரதிஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் பிரதீஸ் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளன.

ALSO READ  3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

மேற்கொண்ட விசாரணையில்  சிறு வயதிலேயே மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான இவர், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், மூதாட்டி மீனாட்சிக்கும் இளைஞர் பிரதிஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிவர் புயலுக்கு திறந்ததையடுத்து மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு :

naveen santhakumar

மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் -பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

News Editor

மனைவியின் தலையை துண்டித்த கணவன்.. சேலத்தில் நடந்த கொடூரம்…..

naveen santhakumar