ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஏப்ரல் 1 முதல் உலகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்
இதனால் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தமிழகத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கலாம்
இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் பரிசோதனை முறையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உணவு வழங்கல் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதற்காக ரேஷன் அட்டையை பயன்படுத்தி அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே மக்கள் பொருட்களை பெற முடியும். இதனால் தங்கள் மாநிலங்களை விடுத்து வெளிமாநிலங்களில் வந்து பணியாற்றுவோர் அரசின் பலன்களை பெற முடியாத சூழல் இருந்தது.
இதனை சரிசெய்யும் விதமாக ஒரே தேசம் ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி மக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளைக் கொண்டு நாட்டின் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும் மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற முடியும்.