சென்னை:
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரத ஜனதா கட்சி சார்பில் சுதந்திர தின லோகோவை பாரத ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார்.
அந்நிகழ்வின்போது பாரத ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து இப்போது கருத்து எதுவும் கூற முடியாது என்றும் இன்னும் ஆறு மாதத்திற்கு பின்னர் தான் முழுமையாக பேச முடியும் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., 75வது சுதந்திர தின விழாவை திருவிழாவாக கொண்டாட இருக்கிறது. சுதந்திரத்துக்காக போராடிய 75 தலைவர்கள் வசித்த இடங்களுக்கு 75 பா.ஜ., நிர்வாகிகள் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்த உள்ளனர்.
வரும் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் மக்கள் ஆசி வேண்டி எனும் யாத்திரையை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் கோவையில் துவக்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்
திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை., பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் என பாரத ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.