தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததால் நீலகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் விதித்திருந்தன.இதனால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மலை ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது.காலை 7:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்கின்றனர். -சா.கற்பகவிக்னேஷ்வரன்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.