சென்னை :
தமிழ் நாட்டில் 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் கருத்துக்கள் கேட்டிருந்தார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் 6 ம் வகித்து முதல் 8 ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை அக்டோபர் மாதம் முதல் திறக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.