கோவை:-
தொழிற்பேட்டை அமைக்க, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்த விவசாயிகள், கலெக்டர் காலில் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேரடியாக நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
முன்னதாக கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் அக்கரைசெங்கபள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கலூர், இலுப்பநத்தம், பள்ளிபாளையம் 6 பஞ்சாயத்தில் தொழிற்பேட்டை அமைக்க 1,504 எக்டர் பரப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் சுற்றுவட்டார பகுதி பொது மக்கள், விவசாயிகள் 200 பேர் கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுனர்.
பின்னர் குறை தீர்ப்பு கூட்டத்தில்மனு கொடுக்க வந்த மூதாட்டி உள்பட சிலர் கலெக்டரின் காலில் விழுந்து, நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கதறினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.