தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பேராவூரணி:-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதிமுக சட்டபேரவை உறுப்பினர் ம.கோவிந்தராஜ்-க்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது, தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
முன்னதாக, திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ செங்குட்டுவன் மற்றும் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி என நேற்று முன் தினம் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடதக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.