தமிழகம்

என் மீது பொய் வழக்குகள்; தற்கொலைக்கு தூண்டுகின்றனர்- நீதிமன்ற நீதிபதி முன் கதறிய மீரா மிதுன்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

காவல்துறையினர் தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டுவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை மீரா மிதுன் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Bigg Boss 3 Meera Mithun Crying Fathima Babu Abhirami Venkatachalam |  Galatta

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ  ஒரே மாதத்தில் 2-வது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம்!

இந்நிலையில் மீரா மிதுன் மீது கடந்த 2019 மற்றும் 2020ல் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள விடுதி மேலாளரை தாக்க முற்பட்டது உள்ளிட்ட 2 வழக்குகளிலும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்குகள் தொடர்பாக மீரா மிதுனை கைது செய்த போலீசார் புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலசுப்ரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.

ALSO READ  மருத்துவமனையிலிருந்து தப்ப முயன்ற சிவசங்கர் பாபா கைது…!

அப்போது காவல்துறையினர் தன் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நீதிபதி முன்பு நடிகை மீரா மிதுன் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு வழக்குகள் குறித்து முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் அவர் முறையிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்ரீரங்கம் ஜீயர் தேர்வு நியமனம் குறித்து அமைச்சர் கருத்து !

News Editor

சிறை மரணம்: சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் நல்லடக்கம்…

naveen santhakumar

சிலிண்டரின் விலை 15 நாட்களில் 100 ரூபாய் அதிகரிப்பு…!

News Editor