கனிமொழி எம் பி பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்து, தி.மு.க. கூற்று உண்மை என்பதை உறுதிசெய்துள்ளது சி.பி.ஐ.
பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹெரென் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கனிமொழி எம் பி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ளார். அதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அதிமுக மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும் மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது.
எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
#pollachi #victimcase #kanimozhi #Tamilthisai