தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… உதயநிதி கொடுத்த கார் பரிசு யாருக்கு?

Jallikattu
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 5.30 மணி அளவில் நிறைவடைந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்திருந்ததால், மறுநாளான ஜனவரி 17ம் தேதி அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 8 சுற்றுகளாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நிறைவு பெற்றது.

ALSO READ  பதவி உயர்வு தேர்வுக்கான TNPSC தேர்வில் கோளாறு - டி.என்.பி.எஸ்.சி.விளக்கம்

இந்த போட்டியில் 21 காளைகளை அடங்கிய முதலாவதாக வந்த கருப்பாயூரணி கார்த்திக்கு எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அறிவித்த கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 2019,2020ம் ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்தவர். 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ராம்குமாருக்கு இரண்டாவது பரிசாக பைக்கும், 13 காளை அடக்கிய சித்தாலங்குடியைச் சேர்ந்த கோப்லகிருஷ்ணனுக்கு என்பவருக்கு 3வது பரிசாக பைக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த காளையாக புதுகோட்டை கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவது புல்லட் காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி..

naveen santhakumar

முதல் முறையாக விபத்தை தடுக்கும் ரப்பர் உருளை

Admin

முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை.. 

naveen santhakumar