சென்னை:-
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை ஏற்று முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், போத்தீஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இசனை தலைமைச்செயலகத்தில் போத்தீஸ் பட்டு ஆலயத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் போத்தி அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.