காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நவம்பர் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை 4 வழிச்சாலையில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடந்த 35வது பட்டமளிப்பு விழாவில் அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.