தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் துவங்கியதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினர், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், குழந்தைகள், அரசு ஊழியர்கள் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சரின் குரானா நிவாரண நிதிக்காக கோவை மத்திய சிறையில் சிறைவாசி ஆக இருந்து வரும் ஒருவர் அவரது வைப்பு தொகையில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராம் என்பவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கோவை சூலூரில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைதாகி விசாரணை சிறைவாசிகள் கோவை மத்திய சிறையில் இரு ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வைப்பு தொகையில் இருந்து (PCP- Prisoner’s Cash Property) ரூபாய் 20 ஆயிரத்தை சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணனிடம் வழங்கியுள்ளார். இவரின் இச்செயலுக்கு இதர சிறைவாசிகளின் சிறை அதிகாரிகளும் பாராட்டுதல் தெரிவித்துள்ளனர்.