சென்னை:
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் பேராசிரியராக வேல்ராஜ் 33ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.தமிழாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் வேல்ராஜ் ஐ அண்ணா பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாபல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது பதவிக்காலம், கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. எனவே புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, தமிழ்நாடு ஆளுனர் சார்பில் தேடல் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் சார்பில் புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆன்லைன் வழியாக நேர்முக தேர்வு நடந்தபட்டது.
இதைத்தொடர்ந்து தேர்வுக்குழு தனது பரிந்துரையை தமிழ்நாடு ஆளுனரிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் தற்போது அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் ஐ நியமனம் செய்து ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
பேராசிரியர் வேல்ராஜ் வரும் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என ஆளுனர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.