சென்னை:
தமிழகத்தில் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸ் தொற்று, கல்லீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, எம்.ஆர். தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசிகள் மாநிலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக தற்போது பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வழக்கமான தடுப்பூசிகளை வழங்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே நவம்பர் 5ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசியையம் வழங்க வேண்டும் எனவும் பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசிபோடுவதை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வதோடு பள்ளியில் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.