தமிழகம்

‘மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாகாதீர்கள்’ ரஜினி வேண்டுகோள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நான் அரசியலுக்கு வரமாட்டேன் மேலும் மேலும் என்னை வேதனைக்கு உள்ளாகாதீர்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்.

கடந்த மாதம் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி காந்த அறிவித்திருந்த நிலையில்  அவரது ரசிகர்கள் சிலர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டி போராட்டம் நடத்தினார்கள். மேலும் ரஜினி தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என பலரும் பேசிவந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக ரஜினி காந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,” நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மன்ற நிர்வாகிகளும், மன்றப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். கட்டுப்பாடுடன், கண்ணியத்துடன் நடந்த போராட்டத்திற்கு பாராட்டுகள். ஆனால் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் உத்தரவை மதித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நன்றி. நான் என் முடிவை கூறி விட்டேன்.

ALSO READ  71 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து....

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். ” என குறிப்பிட்டுள்ளார்.

#rajinikanth #rajinikanthpoliticsentry #superstar #rajini #tamilthisai #rajinimakkalmandram


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகாலை நேர்ந்த பேருந்து விபத்து.. 20 பேர் பலியான பரிதாபம்

Admin

நிஜ நாயகன் ஜெயக்குமார்: முதல்வர் பாராட்டு…! 

naveen santhakumar

மீண்டும் முழு ஊரடங்கா?… WHO விஞ்ஞானி விளக்கம்!

naveen santhakumar