தமிழகம்

நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் : தமிழருவி மணியன் அறிக்கை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழருவி மணியன் “இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அறிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ரஜினி “கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுப்பட போவதில்லை” என்று நேற்று  அறிவித்திருந்தார்.  முன்னதாக அவர் கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக நடிகர் ரஜினிகாந்த் நியமனம் செய்தார். 

இந்நிலையில் ‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த நிலையில், இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என தமிழருவி மணியன் அறிக்கை வெளியியுள்ளார். அதில்  இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். தி.மு.க.வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வர மாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொது வாழ்க்கைப் பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன்.

ALSO READ  அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை..! 

காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது.” என்று  தமிழருவி மணியன் குறிப்பிட்டுள்ளார். 

#rajinikantha #rajinikanthpoliticalentry #tamilaruvimaniyan #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் ஒளிபரப்பு…

naveen santhakumar

சென்னையில் 2015-ஐ விட 10 மடங்கு அதிக மழைக்கு வாய்ப்பு… 

naveen santhakumar

ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களை அடையாளம் காணும் செயலி…

naveen santhakumar