தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
இனி ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை பேப்பர்களாக வைக்கத் தேவையில்லை. அவற்றை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்தாலே போதும்.
அக்டோபர் 1-ம் தேதி முதல் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் ஆர்.சி புக், ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவற்றை ஹார்ட் காப்பிஸ்களாக அதாவது பேப்பர்களாக வைக்க அவசியமில்லை. அதற்கு மாறாக மத்திய அரசின் டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த டிஜிலாக்கரைப் பதிவிறக்கம் செய்து இந்த ஆவணங்களை அதில் டிஜிட்டல் முறையில் சேமித்துக் கொள்ள முடியும். இவற்றை, போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வின்போது கேட்டால் இந்த டிஜிட்டல் ஆவணங்களைக் காண்பித்தாலே போதுமானது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.