சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன் என்பவர் பொது நல ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன
ஆனால் பலர் ரியர் வியூ கண்ணாடிகள் அகற்றி விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. எனவே ரியர் வியூ கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இவ் வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என வாகனம் ஓட்டுபவரை எச்சரிக்கும்படி வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் புதிய வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தலாம் என்று போக்குவரத்து துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.