தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப் பட்டுள்ள ஆர்.என்.ரவி அடுத்த வாரம் பதவியேற்க இருக்கிறார் . அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் .
பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் 14 – வது கவர்னராக கடந்த 2017 – ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றார் . அவரது பதவி காலத்தில் , மாவட்ட வாரியாக ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள சென்றது , அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது .
அவரது பதவிக் காலம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் , கடந்த மாதம் அவர் மாற்றப் படலாம் என்று கூறப்பட்டது . ஆனால் , கடந்த 31 – ந்தேதி அவருக்கு பஞ்சாப் மாநில கவர்னர் பொறுப்பும் , தொடர்ந்து சண்டிகர் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது .
புதிய கவர்னர் ஆர்.என்.ரவி அதன் பிறகு , டெல்லி சென்ற அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா , பிரதமர் நரேந்திரமோடி , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பேசினார் . இந்த பரபரப்பு அடங்குவதற்குள் , பன் வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் முழுநேர கவர்னராக அறிவிக்கப்பட்டார் .
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப் பட்டுள்ளார் . இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் . தற்போது , ஆர்.என்.ரவி நாகலாந்து மாநில கவர்னராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது . தற்போது , சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருந்து வரும் பன்வாரிலால் புரோகித் , வரும் 13 – ந்தேதி வரை ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது . எனவே , அதுவரை அவர் இங்கேயேதான் இருப்பார் .
எனவே , அதன் பிறகே புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி சென்னை வந்து பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிகிறது . அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் .