சாதிக்குள் என்னை அடக்கி விட வேண்டும் என பலர் நினைத்தார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் காலம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அந்தவகையில் சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி உள்ளது எனக் கூறினார். மேலும், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், சாதி அடிப்படையில் என்னை பூமிக்குள் அடங்கி விடவேண்டும் என பலர் நினைத்தார்கள் எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ஊழல் பட்டியலை கொடுக்கும் திமுகவின் 2ஜியின் ஊழல் பற்றி என்ன சொல்வது என கேள்வி எழுப்பினார். மேலும், சட்டமன்ற தேர்தலில் பல வியூகங்களை வகுத்துள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.