தமிழகம்

சாதிக்குள் என்னை அடக்க நினைத்தார்கள்; சரத்குமார் குற்றசாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாதிக்குள் என்னை அடக்கி விட வேண்டும் என பலர் நினைத்தார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் காலம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அந்தவகையில்  சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி உள்ளது எனக் கூறினார். மேலும், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், சாதி அடிப்படையில் என்னை பூமிக்குள் அடங்கி விடவேண்டும் என பலர் நினைத்தார்கள் எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ஊழல் பட்டியலை கொடுக்கும் திமுகவின் 2ஜியின் ஊழல் பற்றி என்ன சொல்வது என கேள்வி எழுப்பினார். மேலும், சட்டமன்ற தேர்தலில் பல வியூகங்களை வகுத்துள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்த 700 பேர்... இதில் ஏழு பேருக்கு கொரோனா....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

naveen santhakumar

அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்: உயர்க்கல்வித்துறை உத்தரவு

naveen santhakumar

ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா… இவ்வளவு பேருக்கு தொற்றா?

naveen santhakumar