சென்னை
தென்காசி மாவட்டம் தி மு. க வைச் சேர்ந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பளு தூக்கும் போட்டியில் வெற்றி சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு பளு தூக்கும் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா 100 கிலோ, 120 கிலோ எடை பிரிவுகளில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசினை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் கோவாவில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கும், நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டியிலும் பளு தூக்கும் போடியில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பளு தூக்கும் வெற்றி பெற்றதை பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.