தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் மழையால் தத்தளித்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஏற்கெனவே சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மண்டலமாக வலுப்பெற்று இன்று கரையைக் கடக்கிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.