திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் படித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து மாணவி, கடந்த 9ம் தேதி பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்று, விடுதி அறையில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகம் தொடர்பு கொண்டு, அவருக்கு உடல் நிலை சரியில்லை என வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்னதாக அவர் பதிவு செய்த வீடியோவில் பள்ளி நிர்வாகம் மதமாற்ற வற்புத்தியதாகவும், மறுத்ததால் பள்ளியை தூய்மைப்படுத்த சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.