தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,
செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது. இதனால் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்களை கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை தொடங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.