தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகம் முழுவதும் கொரோனா 2-ம் அலை வைரஸ் தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுவரும் கரூர் நகர போலீசார் பேருந்து ரவுண்டானா நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தமிழக அரசு உத்தரவை மீறி 100 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் 4 சக்கர வாகனங்கள் 3 இ பாஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஜவகர் பஜார் பகுதியில் தடையை மீறி செயல்பட்டு வந்த ஜவுளி நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.