தமிழகம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு- இல்லத்தரசிகள் அதிருப்தி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை விலை, இன்று (ஆகஸ்ட் 17) முதல், 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

ALSO READ  வடமாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களிலும் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கலக்கத்தில் மக்கள்..!

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50 விலையில் விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர், இன்று முதல் ரூ.875.50 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.1,756க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூக்கு போடுவது குறித்து விளக்கமளித்த புதுமாப்பிள்ளை பலி

Admin

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு

Admin

இரண்டு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி !

News Editor