தமிழகம்

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; போராட்டத்தில் குதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரான தடுப்பூசி மருந்து இல்லாமல் பொதுமக்கள் அவதி உடனடியாக மருந்துகளை தமிழக அரசு அனுப்பி வைக்காவிட்டல்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்த போவதாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மனுவில் கூறியுள்ளதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர்  உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும் மாவட்டத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து இல்லாததால் இன்று  நூற்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி போடும் மையங்கள் மூடப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் கொரோனா மையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ  மார்ச் 1 முதல் வீடுகளுக்கு மின் இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்- மின்சார வாரியம்....

மேலும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக பூட்டிய மையம் முன்பு பொதுமக்கள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உடனடியாக தடுப்பூசி மருந்துகளை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அபிராமி ராமநாதனுக்கு மத்தியஅரசு கவுரவம்…

naveen santhakumar

தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

Shanthi

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… உதயநிதி கொடுத்த கார் பரிசு யாருக்கு?

naveen santhakumar