திருச்சி
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன். புதுக்கோட்டைமாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினை இன்று அதிகாலை 2 மணியளவில் பைக்கில் சென்று விரட்டி சென்றுள்ளார்.
சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் தொடர்ந்து விரட்டி வருவதை அறிந்த ஆடு திருடும் கும்பல் ஆத்திரம் அடைந்து பூமிநாதனை வெட்டிக் கொலை செய்தது. இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் உடல் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஏ.டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளாதோடு பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது