சென்னை:-
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஜூன் 1-ம் தேதி தொடங்க இருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் நிறைவில், அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1ம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதன்படி தேர்வுக்கான புதிய தேர்வு அட்டவணை:-
மேலும், 11-ம் வகுப்பில் ஒத்திவைக்கப்பட்ட பாடம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுதேர்வு பாடத்திற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பு வேதியல், கணக்குப்பதிவியல், புவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் 16-ம் தேதி காலை நடக்க உள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறுதேர்வு 18-ம் தேதி காலை நடக்க உள்ளது.
இதற்காக ஹால் டிக்கெட்டை dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.