தமிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு உயரிய விருது;  நேரில் வாழ்த்திய முதல்வர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஓ.என்.வி விருது அகில இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் தேசிய விருதாக கருதப்படுகிறது.  தற்போது இந்த விருது தமிழ் இலக்கியவாதி கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருது ஒரு சிலை மற்றும் ஒரு தகுதி பட்டயம் அத்துடன் 3 லட்சம் ரொக்க பணம் வழங்கப்படும். சிறந்த மலையாள படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இவ்விருது முதல் முறையாக மலையாளி அல்லாத இலக்கியவாதிக்கு கொடுப்பது இதுவே முறையாகும். 

ALSO READ  விராட் கோலியை free-யா விடுங்கப்பா… சொன்னது யார் தெரியுமா?

கவிஞர் வைரமுத்துக்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து திரைபிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கோபாலபுர இல்லத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று வைரமுத்துவை சந்தித்த அவர், “கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ‘கவிப்பேரரசு’ அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன்.தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்” என்று பாராட்டியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !

naveen santhakumar

22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஸாருகலா ஊராட்சி மன்ற தலைவரானார்

News Editor

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

naveen santhakumar