தமிழகம்

வாக்களித்த மக்களுக்கு முட்டை வழங்கிய ஸ்டாலின் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்றின் 2-வது அலையானது இந்தியா முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 12  ஆயிரத்தை கடந்து  உள்ளது. அதனுடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுவதால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

இந்நிலையில் பொது மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் திமுக கட்சியின் சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதி திரு. வி.க நகர் குடியிருப்பு பகுதி,மற்றும் ஜி.கே.எம் காலனி ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம், சோப்பு, கிருமி நாசினி அடங்கிய கொரோனா தடுப்பு உபகரணப் பெட்டியும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நபர் ஒருவருக்கு புரத சத்துக்கள் மிகுந்த 30 முட்டைகளும் பழங்களும் இலவசமாக வாங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச பொருட்களை வாங்கி சென்றனர். 

ALSO READ  வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா பலி; உடலை அடக்கம் செய்யும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் !  

News Editor

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடுகள்… மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்!

naveen santhakumar

என் வீடாக இருந்த கட்டிடத்தை, எளிய மக்களுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்ற நினைக்கிறேன் – கமல்ஹாசன்

naveen santhakumar