கொரோனா தொற்றின் 2-வது அலையானது இந்தியா முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 12 ஆயிரத்தை கடந்து உள்ளது. அதனுடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுவதால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பொது மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் திமுக கட்சியின் சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதி திரு. வி.க நகர் குடியிருப்பு பகுதி,மற்றும் ஜி.கே.எம் காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம், சோப்பு, கிருமி நாசினி அடங்கிய கொரோனா தடுப்பு உபகரணப் பெட்டியும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நபர் ஒருவருக்கு புரத சத்துக்கள் மிகுந்த 30 முட்டைகளும் பழங்களும் இலவசமாக வாங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச பொருட்களை வாங்கி சென்றனர்.