சென்னை
தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு செலுத்தி வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சிகளில், வார்டு வரையறை பணிகள் நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து மேயர், சேர்மன், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை வரையறுப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சுந்தரவல்லி, வார்டு மறுவரையறை ஆணைய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மகளிர், பட்டியலினத்தவர்கள், பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.