தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
தமிழ்நாடு கவர்னர் சந்திப்பின் போது தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் பொன்ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக அரசியல் நிலவரம், ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பண்டிகை நாட்கள் வருவதால் கோயில்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக எம்பிக்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.