தமிழகம்

தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி 7 நாட்கள் ஆளுநர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில், 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பொதுசுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ALSO READ  மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளுநரின் மருத்துவர் அளித்த ஆலோசனைப்படி, 7 நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனால் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உடனடியாக அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ALSO READ  அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து:

ஆளுநர் மாளிகை மருத்துவர் நேற்று ஆளுநருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். இதில் ஆளுநர் நல்ல உடல் நலத்துடன் இருப்பது உறுதியானது. இருப்பினும், ஆளுநரை 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர் அறிவுறுத்தினார். இதன்படி, ஆளுநர் தன்னை 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட 21 எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் ஒரு சிலர் மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மரச்செக்கு எண்ணையில் கலப்படம் எச்சரிக்கை ரிப்போர்ட்…

Admin

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்… மக்கள் எதிர்ப்பால் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்…!

naveen santhakumar

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

Admin