நாடுமுழுவதும் பரவிவரும் நோய்தொற்றை கட்டுப்படுத்த அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து வெளியே சுற்றுவதை தடுக்கும் விதமாக தீவிர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவை கந்தேகவுண்டன் சாவடி பகுதியில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வன் தலைமையில் மதுக்கரை தாசில்தார் நாகராஜன்,
வருவாய் துறை ஆய்வாளர் ஹசீபா, ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். இதில் இ- பதிவு இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்பபட்டும், தேவையில்லாமல் வருபவர்களை எச்சரித்தும் அனுப்பினார்கள்.
அதேபோல் தமிழக கேரளா எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ- பாஸ், அல்லது இ- பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு முறையான சான்று இல்லாதவர்களை போலீசார் கேரளாவுக்கே திருப்பி அனுப்புகிறார்கள்.